முகப்பு
தமிழ்நாடு

சகோதரி அனிதா பொறுமை காத்திருக்கலாம்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

சகோதரி அனிதா பொறுமை காத்திருக்கலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

சகோதரி அனிதா பொறுமை காத்திருக்கலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டம் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரியலூர் மாணவி அனிதா மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரி பொறுமை காத்திருக்கலாம். நீட் தேர்விலிருந்து விலக்குபெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  
 

முழு கட்டுரையைப் படிக்க →