தமிழ்நாடு

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை

ஆளுநர் வித்யாசாகர் ராவ் செவ்வாய்க்கிழமை (செப். 19) நண்பகல் 12.40 மணியளவில் சென்னை வருகிறார்.

DIN

ஆளுநர் வித்யாசாகர் ராவ் செவ்வாய்க்கிழமை (செப். 19) நண்பகல் 12.40 மணியளவில் சென்னை வருகிறார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவர் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. 
குறிப்பாக, பேரவைத் தலைவர் பி.தனபால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பைப் பொருத்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நம்பிக்கை வாக்குக் கோருமாறு அவர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடக் கூடும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT