தமிழ்நாடு

ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

DIN

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசவுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிகை இழந்துள்ளதாக ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். 

இதனிடையே சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதலவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவரிப்பார் எனக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT