தமிழ்நாடு

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

DIN

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்றிரவு தனுஷ் கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பாட்டில்களையும், கற்களையும் வீசி மீனவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அனைவரும் உடனே கரைக்கு திருப்பினர். 

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய தாக்குதல் காரணமாக தங்களின் மீன்பிடி வலைகள் சேதமடைந்ததோடு படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT