தமிழ்நாடு

மது போதையில் அரசுப் பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர் கைது!

DIN

சென்னை அருகே மது போதையில் அரசு விரைவு பேருந்தை இயக்கிய ஓட்டுநரும், நடத்துநரும் கைது செய்யப்பட்டனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரசு விரைவு பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது மோதிவிட்டு தாறுமாறாக சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தினர். அப்போது பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் மது போதையில் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் ஆத்திமுற்ற பொதுமக்கள் இருவரையும் அடித்து உதைத்தனர். பின்னர் மது போதையில் இருந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீசில் ஒப்படைத்தனர்.  போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT