திவாகரனின் கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை
மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:35 PM
மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் கலை அறிவியல் கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Advertisement