தமிழ்நாடு

தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு

 இந்த சந்திப்பின் போது உள்துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டின், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

Raghavendran

பரபரப்பான சூழலுக்கிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று சந்தித்தனர்.

ஆளுநரின் அழைப்பின் பேரில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும் இந்த சந்திப்பின் போது உள்துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டின், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை பற்றி கேட்டறிய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது பற்றியும் கேட்டறியலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT