கர்நாடக அரசுப் பேருந்துகள் நாளை இயங்காது: கர்நாடக போக்குவரத்துத்துறை அறிவிப்பு
கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்தில் நாளை இயங்காது என்று கர்நாடக போக்குவரத்துத்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 5) மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என்று கர்நாடக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
Advertisement
தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.