தமிழ்நாடு

தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியுள்ளன.

Raghavendran

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 5) மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என்று கர்நாடக போக்குவரத்துத்துறை புதன்கிழமை அறிவித்தது.

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT