தமிழ்நாடு

தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியுள்ளன.

Raghavendran

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 5) மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என்று கர்நாடக போக்குவரத்துத்துறை புதன்கிழமை அறிவித்தது.

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மர் ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

'ஒரு வழக்கறிஞருக்கே இந்த மனநிலை என்றால்...' - தலைமை நீதிபதி தாக்குதல் முயற்சிக்கு கார்கே கண்டனம்!

தங்கம் விலை 2வது முறையாக உயர்வு! ரூ. 91 ஆயிரத்தைக் கடந்தது!

இசை நிறுவனத்தைத் துவங்கிய ஐசரி கணேஷ்!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT