முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

தூத்துக்குடியில் ஊருணியில் விழுந்து உயிரிழந்த மூன்று மாணவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தூத்துக்குடியில் ஊருணியில் விழுந்து உயிரிழந்த மூன்று மாணவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி கிராமத்தில் சாலையின் ஓரத்தில் உள்ளது குப்பையாபிள்ளை ஊருணி. அதில் குளிக்கச் சென்ற கணேஷ்குமார், கவின்குமார், கௌதம் ஆகிய மூன்று பேரும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
 

முழு கட்டுரையைப் படிக்க →