கருணாநிதியின் சட்டைப் பையில் எப்போதும் ஒட்டிக் கிடப்பது அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் வேலிட்டி ஏர்மெயில் பேனா. பேனா இல்லாமல் எப்போதும் கருணாநிதி வெளியில் வரமாட்டார்.
கண்ணாடிப் பேழையில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, சட்டைப் பையில் பேனா வைக்கப்படவில்லை.
உடல் அடக்கத்தின்போது அந்த இடமே சோகத்தில் மூழ்கி இருந்தது. கண்ணாடிப் பேழையிலிருந்து சந்தனப் பேழைக்கு கருணாநிதியின் உடல் மாற்றி வைக்கப்பட்டதும், மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, கருணாநிதியின் பேரனும் கனிமொழியின் மகனுமான ஆதித்யாவின் முறை வந்தபோது, கருணாநிதியின் சட்டைப் பையில் பேனா இல்லாமல் இருப்பதைப் பார்த்தார். உடனே, அருகிலிருந்த கனிமொழியிடம், கருணாநிதி வழக்கமாகப் பயன்படுத்தும் பேனாவை வாங்கி வந்து சட்டைப் பையில் வைத்தார்.