சென்னை: கேரள வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பாக ரூ.1 கோடி நிதியுதவியை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கடும் மழை மற்றும் அதனால் உண்டான நிலச்சரிவின் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பாக ரூ.1 கோடி நிதியுதவியை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:
கேரள வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவியை செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அத்துடன் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.