தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சென்னை அலுவலகத்தில் அச்சகப் பிரிவில் மிஷின்மேனாக 30 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஏ.சண்முகம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
அவருக்கான பணிநிறைவு பிரிவு உபசார நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிளை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு முதுநிலை மேலாளர் ஏ.வி. ஸ்ரீதர், மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை மேலாளர் ஆர். பாலகுரு, நிதிப் பிரிவு மேலாளர் ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணி ஓய்வு பெற்ற ஏ.சண்முகத்தின் சேவையைப் பாராட்டி கெளரவித்தனர்.