தமிழ்நாடு

தமிழகத்தில் 16 ஐ.பி. எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் 

DIN

சென்னை: தமிழகத்தில் 16 ஐ.பி. எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக உள்ள சாரங்கன் மாநில குற்ற ஆவணக் காப்பக ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதுவரை மாநில குற்ற ஆவணக் காப்பக ஐ.ஜியாக இருந்த சுமத்ரன், தற்பொழுது அமலாக்கத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வட சென்னை கூடுதல் ஆணையராக தற்பொழுது தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஏ.டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவ் தற்பொழுது சமூக நீதி மற்றும் மனித உரிமை ஏ.டி.ஜி.பியாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக மகேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல மேலும் 11 ஐ.பி. எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT