தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி ஆணையம் கடிதம்

DIN

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி தமிழக உள்துறை மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பரப்பன அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவின் வாக்குமூலத்தை நேரடியாக பெற ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து சசிகலாவை விசாரிக்க அனுமதி பெற்றுத்தர கோரி தமிழக உள்துறை மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT