தமிழ்நாடு

முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து

DIN


சென்னை: முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததன் காரணமாக, பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் விரைவுரையாளர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் மறுதேர்வு நடைபெறும் என்றும், ஏற்கனவே நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை, தேர்வில் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக தேர்வெழுத விரும்புவோர், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT