தமிழ்நாடு

விரைவில் அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள், தொலைக்காட்சி உதயம்! 

DIN

சென்னை: அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளதாக அதிமுகவினை வழி நடத்தும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக எம்.எள்.ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவினை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளது. அதற்கான அடிப்படைப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.  

ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகிய இரண்டும் தற்பொழுது டிடிவி தினகரன் வசம் உள்ளதால் அதிமுகவுக்கென தனியாக ஒரு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி துவங்க வேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் தரப்பு தள்ளப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT