தமிழ்நாடு

விழாவில் காணாமல் போன புதுவை முதல்வரின் தங்கப் பேனா

DIN

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவின் போது, முதல்வர் வே.நாராயணசாமியின் தங்கப் பேனா திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவையில் மாநில அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை தொடக்கி வைத்தார். உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட கோவிந்தசாமி சாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முதல்வருக்கு பல்வேறு நிர்வாகிகள், அதிகாரிகள் சால்வை அணிவித்தனர். அப்போது, திடீரென தனது சட்டைப்பையில் வைத்திருந்த தங்கப் பேனாவை முதல்வர் நாராயணசாமி பார்த்தபோது, அதைக் காணவில்லை. 

இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருக்கு அணிவிக்கப்பட்ட சால்வைகளை அகற்றும்போது பேனா காணாமல் போய் இருக்கலாம் என்று கருதி அதிகாரிகளும், காவலர்களும் தேடிப் பார்த்தனர். 

இதனிடையே நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, பெண் ஒருவர், கீழே கிடந்ததாகக் கூறி தங்கப் பேனாவை கொண்டு வந்து முதல்வரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து பரபரப்பு அடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT