தமிழ்நாடு

பேருந்து கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

DIN


கரூர்: நிதிச்சுமை காரணமாக உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழகத்துக்கு செலவு அதிகமாகியுள்ளது. தவிர்க்க முடியாத நிலையில்தான் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளன. 13வது ஊதிய குழுவுக்கு முன்பே நாள் ஒன்றுக்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.9 கோடி நட்டம் ஏற்பட்டது. ஊதிய உயர்வுக்குப் பிறகு நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி நட்டம் ஏற்படுகிறது.

2011ம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது 7 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடுமையான டீசல் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு, பேருந்து உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற நிதி நெருக்கடியினால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த விலை உயர்வுக்குப் பிறகும் கூட, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அரசு பேருந்து கட்டணம் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம் தான்.  பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகும் அண்டுக்கு ரூ.900 கோடி கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படும். மக்கள் நலன் காக்கும் அதிமுக அரசின் இந்த கட்டண உயர்வை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அதே சமயம், உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்பப் பெற வாய்ப்பில்லை என்றும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தை லாபத்துடன் இயக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் கருத்துக்களை அரசு பரிசீலித்து ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT