கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஜூலை 10-ஆம் தேதி சென்னை திரும்பினார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தனியார் விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது. நல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.