கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 50,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவான 45,000 கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக கபினி அணைக்கு வரும் நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. ஏற்கனவே கபினி அணை அதன் முழு கொள்ளளவான 84 அடியை எட்டிவிட்டதால், அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காவிரியில் 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.