தமிழ்நாடு

டிடிவி தினகரன் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மருத்துவப்படிப்பு படிக்க முடியவில்லை என்பதற்காக நான் தளர்ந்துவிடவில்லை. இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மீட்கப்படுவார்கள். சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்ற உயர்நீதிமன்ற கருத்துக்கு உரிய பதில் அளிக்கப்படும். 

கோயில் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும். கடத்தல் சிலைகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும். முட்டை கொள்முதலையும் வருமான வரி சோதனையும் தொடர்புபடுத்தக்கூடாது. முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததா இல்லையா என்பதே தற்போதைய கேள்வி. சிஏஜி அறிக்கைகள் திமுக ஆட்சிக்காலத்திலும் வெளியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT