தமிழ்நாடு

புதுச்சேரி பேரவைக்குள் 3 நியமன எம்எல்ஏக்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

DIN


புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்களையும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாஜக நியமன எம்எல்ஏக்களான சுவாமிநாதன், சங்கர்,  செல்வகணபதி ஆகியோரை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்குமாறு புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வழக்குத் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனைத்துத் தரப்புக்கும் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை 3 வார காலத்துக்கு ஒத்திவைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT