தமிழ்நாடு

ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

தினமணி

வங்கக்கடலின் ஆழமான பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தென் மேற்கில் இருந்து மேற்கு திசை நோக்கி பலமான காற்று வீசக்கூடும். வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்குவங்கம் மற்றும் ஒடிஸா கடலோரங்களில் மையம் கொண்டிருந்த ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் காணப்படுகிறது.
 வடக்கு வங்கக்கடல் மற்றும் ஆழமான கடல் பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்படும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 கனமழை: தென் மேற்குப் பருவமழை தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யவாய்ப்பு உள்ளது.
 சென்னையில் மழை வாய்ப்பு: சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டமாகக் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT