தமிழ்நாடு

உலக அளவில் சகோதரத்துவத்தை நிலைநாட்டியவர் விவேகானந்தர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தினமணி

உலக அளவில் ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியவர் விவேகானந்தர் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
 ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் எழுதிய "விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' , "மனிதனுக்கு மரணமில்லை' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், உலக சமுதாயத்துக்கு யார் வழிகாட்டியாகத் திகழ்கிறாரோ அவர்தான் உண்மையான துறவி. சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரைதான் உலக அளவில் ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியது என்றார்.
 "விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் ' எனும் நூலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட யுஆர்சி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சி.தேவராஜன் பெற்றுக் கொண்டார். "மனிதனுக்கு மரணமில்லை' எனும் நூலை இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட இந்து கல்வி நிலையத் தலைவர் கே.கே.பாலுசாமி பெற்றுக் கொண்டார்.
 நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் முன்னிலை வகித்தார்.
 நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன் ஏற்புரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT