தமிழ்நாடு

காவேரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பு?

ENS

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டதை அடுத்து திங்கள்கிழமை வரை வெளிநோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கோபாலபுர இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இரத்த அழுத்த குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி அனுமதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை வளாகம் வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர். அரசியல் தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து சென்ற வந்த வண்ணம் இருந்தனர்.

காவேரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நோயாளிகளை சந்திக்க அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநோயாளிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மருத்துவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட்டதில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT