தமிழ்நாடு

யார் நீங்க? என்று ரஜினியை பார்த்து கேட்டது ஏன்? சந்தோஷ் விளக்கம் 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் காண சென்ற ரஜினியை பார்த்து யார் என்று கேட்ட இளைஞர் சந்தோஷ், தற்போது அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். 

DIN

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 22-ஆம் தேதி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில், காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சந்தோஷ் எனும் இளைஞர் ஒருவர் நீங்கள் யார் என்று ரஜினியை பார்த்து கேட்பார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

இந்நிலையில், அவர் தற்போது அப்படி கேட்டதற்கான விளக்கத்தை விடியோ மூலம் வெளியிட்டுள்ளார். 

அந்த விடியோவில் அவர் கூறியதாவது, 

"நான் அவரை அப்படி கேட்டதன் நோக்கமே வேறு. ரஜினி என்று சொன்னாலே சமூகத்தில் ஒரு மதிப்பு. அதனால், அந்த 100 நாள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தால் எங்களுக்கு பலமாக இருந்திருக்கும். அதனால், வருத்தத்தில் தான் நான் அதனை கேட்டேன். அதுவும் மக்களுக்காக என்ற உரிமையில் தான் அப்படி கேட்டேன்" என்று விளக்கமளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT