தமிழ்நாடு

சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யக் கூடாது

DIN

சென்னை சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை செங்கல்பட்டுக்கு இடம் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. இந்த இடமாற்ற முடிவை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 15 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் தொன்மை வாய்ந்த கல்லூரிகளில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் ஒன்று. சட்டத்துறையிலே பல ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்தக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT