தமிழ்நாடு

மணல் கடத்தல்: 4 டிராக்டர்கள் பறிமுதல்

DIN

தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து செவ்வாய்க்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர்களை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி பறிமுதல் செய்து, போலீஸில் ஒப்படைத்தார்.
தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, தண்டராம்பட்டு வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் வாழவச்சனூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்பெண்ணை ஆற்றில் டிராக்டர்களில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த கும்பலை அதிகாரிகள் மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால், அதிகாரிகளைப் பார்த்ததும் 4 பேர் டிராக்டர்களை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, உரிய அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர்களை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT