தமிழ்நாடு

டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா ஐ.ஜி.யாக பதவி உயர்வு

DIN

தமிழக காவல்துறை அதிகாரி டி.ஐ.ஜி. சோனல் வி.மிஸ்ரா, ஐ.ஜி.யாக புதன்கிழமை பதவி உயர்வு செய்யப்பட்டார். இரு எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
சோனல் வி.மிஸ்ரா-ஐ.ஜி. மத்திய அரசுப் பணி (சென்னை ஆவடி சிஆர்பிஎப் டி.ஐ.ஜி.).
பி.சி.கல்யாண்-வணிக குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் (திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்).
ஜியாஉல் ஹக்- திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (சேலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்).
சோனல் மிஸ்ரா மட்டும் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். மீதி 2 பேரும் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் எனக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT