தமிழ்நாடு

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தகிக்கும் தமிழிசை! 

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.    

DIN

கோவை: நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.    

பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதன்கிழமை அன்று கோவை வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இந்த மண் பெரியார் பிறந்த மண் என்று கூறுகிறார்கள். இந்த மண்ணில் பெரியார் பிறந்தது பெரிதா? அல்லது பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா?    

ராமர் சிலை மற்றும் சீதை சிலையுடன் ரதம் ஒன்று தமிழகத்தில் வரக் கூடாதா? இந்துக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும்? ஆனால் ஒரு ரதம் வரக் கூடாதா?

எது திராவிட நாடு, எது தமிழ்நாடு என்பதில் ஸ்டாலினுக்கே சந்தேகம் உள்ளது.

இனி இந்து மத்ததை பற்றி பேச யாரும் பயப்பட வேண்டும். நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT