தமிழ்நாடு

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது துரதிருஷ்டவசமாக சிசிடிவி கேமராக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன: பிரதாப் ரெட்டி

DIN


சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, துரதிருஷ்டவசமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதாப் ரெட்டியிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தருவதில் அப்பல்லோ மருத்துவமனை சிறப்பு கவனம் செலுத்தியது. அப்பல்லோ மருத்துவர்களும், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பாக சிகிச்சை அளித்தனர்.

ஜெயலலிதாவை யார் யார் சந்திக்க வேண்டும் என்பதை உடன் இருந்தவர்கள் முடிவு செய்தார். அவர்கள் கூறிய நபர்கள் மட்டும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையின் போது உறவினர்கள் சிலர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக அளித்தோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடப்பதால் அதுபற்றி தற்போது எதையும் கூற முடியாது.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமாக செயலிழக்கம் செய்யப்பட்டன. அதனால்தான் அவர் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் எதுவும் இல்லாமல் போனது. ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விடியோ காட்சிகளைப் பார்க்க நேரிடும் என்பதற்காகவே சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டதாகவும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT