முகப்பு
தமிழ்நாடு

இயந்திரக் கோளாறு: சென்னை விமானம் 5 மணிநேரம் தாமதம்

இயந்திரக் கோளாறு காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் விமானம் வியாழக்கிழமை 5 மணிநேரம் தாமதமாக சென்னை சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:34 AM
பகிர்:

இயந்திரக் கோளாறு காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் விமானம் வியாழக்கிழமை 5 மணிநேரம் தாமதமாக சென்னை சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 7.40 மணியளவில் சென்னை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 74 பயணிகள் சென்னை செல்ல இருந்தனர். 
இந்நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நிறுத்திவைக்கப்பட்டது. அதில் செல்ல இருந்த பயணிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
5 மணி நேரத்திற்கு பின்னர் இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் 12.40 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.