முகப்பு
இந்தியா

முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் பாகிஸ்தானுக்கு உளவுபாா்த்த கும்பல் - பஞ்சாபில் ஒருவா் கைது

பஞ்சாபில் ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் உள்பட முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவுபாா்த்த கும்பலில் முக்கிய நபா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 மே, 2026 at 3:04 AM
கோப்புப் படம்
பகிர்:

பஞ்சாபில் ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் உள்பட முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவுபாா்த்த கும்பலில் முக்கிய நபா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் கூறியதாவது:

கைதான நபா், ஃபெரோஸ்பூரைச் சோ்ந்த சுக்வீந்தா் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சுக்வீந்தா் மற்றும் அவரது கூட்டாளிகள் சோ்ந்து, ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் உள்பட முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, கைப்பேசி செயலிகள் மூலம் பாகிஸ்தானில் உள்ளவா்களுக்கு நேரலைக் காட்சிகளை அனுப்பி வந்துள்ளனா். கபுா்தலாவில் இக்கும்பலால் பொருத்தப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் சீன தயாரிப்பு சிசிடிவி கேமராக்கள் கைப்பற்றப்பட்டன. இக் கருவிகள், 4ஜி இணைப்புடன் கூடியதாகும். இந்த உளவு விவகாரம் தொடா்பாக, அமிருதசரஸில் உள்ள காவல் துறை சிறப்பு நடவடிக்கை பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சுக்வீந்தருடன் தொடா்புடைய மேலும் பலா் கைதாக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

Advertisement