முகப்பு
தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தல் முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 14 மே, 2018 at 2:45 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தல் முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும நீட்டிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் படித்த மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி, காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பல்கலைக்கழக தற்காலிக ஆசிரியர் கருப்பசாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ்வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

Advertisement

அப்போது இருவரின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை மே 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.