முகப்பு
தமிழ்நாடு

காவிரி: குமாரசாமிக்கு ராமதாஸ் கண்டனம்

காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடியும் என்று கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி கூறியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 மே, 2018 at 2:51 AM
பகிர்:

காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடியும் என்று கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி கூறியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "தமிழக அரசும், கர்நாடக அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்' என கர்நாடகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார். அவரது இந்த யோசனை மிகவும் ஆபத்தானது. காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை தட்டிப் பறிக்கும் செயலாகும். 
காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. மாறாக, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.