கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டம்: பங்குச் சந்தையில் வேதாந்தா குழுமத்துக்கு சரிவு 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து வேதாந்தா குழுமம் பங்குச் சந்தையில் சரிவை கண்டுள்ளது.

DIN

வேதாந்தா குழுமம் நடத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நேற்று இந்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக மாறியது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 11 பேர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே போராட்டம் அனைத்தும் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த ஆலையின் உற்பத்தியை இரட்டிப்பாக்க போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில், பங்குச் சந்தையில் வேதாந்த குழுமத்தின் பங்கு இன்று சரிவை கண்டுள்ளது. காலை 3.2 சதவீதமாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி அதன் பங்கு - 5 சதவீதமாக சரிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT