மதுரை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய மதுரைக் கிளை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பேராசிரியை பாத்திமா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதி பெற்ற இடத்தை விடுத்து வேறு இடத்தில் விரிவாக்கப் பணி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையின் 2வது யூனிட்டை நிறுவி வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.