தமிழ்நாடு

தூத்துக்குடி சம்பவம்: ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி. சொல்வது என்ன?

DIN


சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

எல்லோர் மனங்களிலும் தோன்றும் ஒரு விஷயம், துப்பாக்கிச் சூட்டை தவிர்த்திருக்கலாம் என்பதே. 

கிராம மக்களின் போராட்டம் வன்முறையாக மாற என்ன காரணம்? 10க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய துப்பாக்கிச் சூடு நடந்தது ஏன்? 

இது குறித்து தூத்துக்குடியில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி. கூறியதாவது, நிர்வாகத் திறமை தோல்வி அடைந்ததே இந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு, உயிர் பலிகளுக்குக் காரணம் என்கிறார்.

மாவட்ட புலனாய்வுத் துறையின் தகவல்கள் ஒன்று திரட்டப்படாமல் விட்டதும், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையின் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்து, துப்பாக்கிச் சூட்டுக்கு வழிகோலிவிட்டது என்று கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் மக்கள் நெடு நாளாக போராடி வருகிறார்கள். இதனை சரி செய்ய ஸ்டெர்லைட் ஆலையும் தவறியுள்ளது. அதன் தொடர்ச்சிதான் இன்று இந்த மோசமான சம்பவத்துக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது.

இது மட்டுமல்ல, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு மிகவும் திறமையான, அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகளையே பணியமர்த்த வேண்டும். அதாவது, 6 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட அதிகாரிகளைத்தான் தூத்துக்குடியில் பணியமர்த்தியிருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே இதுபோன்ற சூழ்நிலையை கையாள முடியும். ஆனால் தற்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் தாண்டி, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்கிறார் அவர்.

பொதுமக்கள் நிறைந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் 2011ம் ஆண்டு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இது பற்றி சென்னை பல்கலையின் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துக் கொடுத்துள்ள எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு செய்ய வேண்டிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT