FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் புரோஹித்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை (செவ்வாய்கிழமை) தூத்துக்குடி செல்கிறார்.

Updated On : 28 மே 2018, 2:12 pm IST
பகிர்:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தின் போது காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் எதிர்வலையை கிளப்பியது. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கபட்டது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் காயமடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளித்தனர். 

தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளாக தமிழகத்தில் முதன்முறையாக இணையதளம் முடக்கப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டமே மூன்று நாட்களுக்கு முற்றிலுமாக முடங்கியது. இது போன்ற பதற்றமான சூழல் படிப்படியாக குறைந்த நிலையில், 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அரசு சார்பாக முதன்முதலாக அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார். 

இந்த வரிசையில் இன்று காலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடிக்கு செல்கிறார். அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூற இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments