தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்? நீதிமன்றம் கேள்வி

DIN


மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று மத்திய சுகாதாரத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

அது தொடர்பான வழக்கு மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்றும், இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து டிசம்பர் 6ம் தேதி பதில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக் கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT