சென்னை: இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை அருகே கஜா புயல் கரையைக் கடக்கும் போது, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாகை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் இன்று 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.