கோவை மாவட்டம் குரங்கு அருவியில் கஜா புயல் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கஜா புயலின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் பொள்ளாச்சி, வால்பாறை, குரங்கு அருவி பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால், இன்று காலையில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து, மாலை முதல் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.