தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனையில் அவலம்: பெண்ணின் உடலைக் கடித்த பூனை

DIN


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலை பூனைக் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்கப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருடன் உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது உடலை பிணவறைக்குக் கொண்டு செல்லாமல் வார்டிலேயே விட்டுவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

அப்போது அங்கே சுற்றிக் கொண்டிருந்த பூனை, பெண்ணின் உடலைக் கடித்தது. இதைப் பார்த்த நோயாளிகள் மருத்துவர்களிடமும், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர், சம்பவத்தை செல்போனில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இதையடுத்தே அப்பெண்ணின் உடலை ஊழியர்கள் பிணவறைக்குக் கொண்டு சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT