திருப்பூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் வந்த 4 பேர் பலியாகினர்.
கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் வந்த 4 பேர் பலியாகினர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் பொள்ளாச்சியில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில், காரில் இருந்த 6 வயது சிறுமி உட்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.