தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு

DIN


டெங்கு காய்ச்சல் சிகிச்சை பெறுவோரின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் 
ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேசியது:
சென்னையில் தற்போது பருவநிலை மாறி வருவதால் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு உரிய சிசிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனி வார்டில் சிகிக்சை அளிக்க வேண்டும். மேலும், அவர்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் உடனடியாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பருவமழையையொட்டி, சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் நோய்த் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளனவா என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். நோய்த் தடுப்பு தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இந்தக் கூட்டத்தில் நோய்த் தடுப்பு, மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் செந்தில்நாதன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT