முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் கலை, இலக்கிய அமைப்பு தொடங்க இளையராஜா திட்டம்

புதுச்சேரியில் கலை, இலக்கிய அமைப்பை தொடங்க இசையமைப்பாளர் இளையராஜா திட்டமிட்டுள்ளார்.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:06 AM
புதுவை முதல்வர் வே.நாராயணசாமியை திங்கள்கிழமை சந்தித்த இசையமைப்பாளர் இளையராஜா.
பகிர்:


புதுச்சேரியில் கலை, இலக்கிய அமைப்பை தொடங்க இசையமைப்பாளர் இளையராஜா திட்டமிட்டுள்ளார்.
கலை, இலக்கிய அமைப்பை தொடங்குவது தொடர்பாக, அதற்கான இடங்களைப் பார்வையிடுவதற்காக புதுச்சேரிக்கு இளையராஜா திங்கள்கிழமை வந்தார். அவர் முதல்வர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினார்.
கலை, இலக்கிய நிறுவனம் தொடங்குவது தொடர்பாக இளையராஜா தெரிவித்தவுடன், கலைகளைக் கற்றுத் தரும் பாரதியார் பல்கலைக்கூடம் புதுச்சேரியில் செயல்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.
பின்னர், கலைக்கூடம் அமைந்துள்ள தொகுதி எம்எல்ஏ ஜெயமூர்த்தியுடன், அவரை பாரதியார் பல்கலைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். பாரதியார் பல்கலைக்கூடத்துக்குச் சென்ற இளையராஜா அந்தப் பகுதியை பார்வையிட்டு சென்னை திரும்பினார். இதுதொடர்பாக ஜெயமூர்த்தி எம்எல்ஏவிடம் கேட்ட போது, இயல், இசை, நாடகம் தொடர்பான அமைப்பை இளையராஜா தொடங்கும் எண்ணத்தில் உள்ளார். பாரதியார் பல்கலைக்கூடத்தை பார்வையிட்டார். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.