தமிழ்நாடு

வரும் 26,27ம் தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26, 27ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகம், கேரளா, புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் இன்று இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், நாளையும், நாளை மறுநாளும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கை கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT