தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி.: ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு 12-ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம்

DIN


ஒருங்கிணைந்த பொறியியல் காலி பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் வரும் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. அதில் 44 ஆயிரத்து 524 தேர்வர்கள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றோரில் 665 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12 முதல் 25-ஆம் தேதி வரை மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT