பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திங்கள்கிழமை (செப்டம்பர் 10) நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. பெட்ரோல் }டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதைக் கண்டித்து, திங்கள்கிழமை (செப்.10) நாடு தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இப்போராட்டத்துக்கு ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து சனிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.